பிரதமரின் நிவாரண நிதிக்கு, ஒரு மாத சம்பளத்தை வழங்கிய குடியரசுத் தலைவர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா பல்வேறு விதமாக பொருளாதாரத்தில் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளுக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதியுதவி தரலாம் என கூறினார். இதையடுத்து பல அரசியல் காட்சிகள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என அவர்களால் முடிந்ததை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று கொரோனா தடுப்பு பணிக்காக டாடா குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு அதானி குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்கப்படும் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே திரைப்பட நடிகர் அக்ஷய குமார் ரூ.25 கோடி கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொடர்பான பிரதமரின் நிவாரண நிதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு மாத ஊதியத்தை அளி​த்துள்ளார். மேலும் குடியரசு தலைவர் மாளிகை ஊழியர்களும் ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ள நிலையில், மக்கள் பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு தாராளமாக உதவ முன்வர வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

43 minutes ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

2 hours ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

3 hours ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

3 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

4 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

4 hours ago