Categories: இந்தியா

மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் அதிக கவனம் கொண்டுள்ளார்.! ராகுல்காந்தி விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

அடுத்த மாதம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மிசோராம் மாநிலமும் ஒன்று. 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளை பிரதான கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ளார். இன்று (திங்கள்கிழமை) மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் ஆளுநர் மாளிகை நோக்கி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டார்.

மிசோரம் சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி..!

இந்த பேரணியின் போது மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அவர் பேசுகையில்,  பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய அவர்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மணிப்பூர் மாநிலம் பாஜகவால் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது மணிப்பூர் ஒரு மாநிலம் அல்ல. இரண்டு மாநிலங்களாக பிரிந்து கிடக்கிறது.  அங்குள்ள மக்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர், குழந்தைகள் கொல்லப்பட்டனர், இவ்வளவு நடந்தும் அங்கு பிரதமர் மோடி பயணம் செய்யவில்லை. இது வெட்கப்பட வேண்டிய ஒன்று என்றும் கடுமையாக விமர்சித்தார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

அண்மையில் காங்கிரஸ் கட்சி மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக 39 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago