Categories: இந்தியா

மத்திய பிரதேசத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதுபோன்று, 2,475 கோடி ரூபாய் மதிப்பிலான கோட்டா – பினா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், மோரி-கோரி-விதிஷா-ஹினாட்டியா 4 வழிச்சாலை, ஹினாட்டியா-மெலுவா இருவழிச்சாலை என 1,580 கோடி ரூபாய் மதிப்பிலான 2 சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேலும், மத்திய பிரதேசத்தில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சந்த் ரவிதாஸ் கோவிலுக்கு பிரதமர் மோடி பூமி பூஜை செய்தார். சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதும், கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்வதும் நமது பொறுப்பு. கோவிட் தொற்றுநோய்களின் போது, ஏழைகளை பசியுடன் தூங்க விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

அதன்படி, நாங்கள் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ தொடங்கி 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கினோம், இன்று முழு உலகமும் எங்களின் முயற்சியைப் பாராட்டுகிறது. எங்கள் அரசின் கவனம் ஏழைகளின் நலன் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரமளிப்பதில் உள்ளது. இன்று தலித், பிற்படுத்தப்பட்ட அல்லது பழங்குடியினராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, புதிய வாய்ப்புகளை எங்கள் அரசு வழங்கி வருகிறது என உரையாற்றி வருகிறார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

23 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

54 minutes ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

1 hour ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

2 hours ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

2 hours ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

14 hours ago