Prime Minister Narendra Modi 11 days fasting [file image]
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜன. 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நாளுக்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இதன்பின் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நேற்று முதல் தொடங்கி உள்ளன. இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த 12ம் தேதி தொடங்கினார். இந்த நிலையில், பிரதமர் மோடி கடுமையான விரதத்தை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த 11 நாள் கடும் விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி விதிமுறைகள் மற்றும் சடங்குகளை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறார்.
மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..!
அதாவது, ஒரு போர்வையுடன் மட்டுமே தரையில் தூங்குவது, அதிகாலையில் எழுந்திருப்பது, மந்திரம் ஓதுவது, தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, சிறிது நேரம் மௌன விரதம் இருப்பது, வெங்காயம், பூண்டு இல்லாத சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது, மத நூல்களைப் படிப்பது, தூய்மையை பேணுவது, சொந்த வேலைகளை தானே செய்வது என பல வகையான கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக “சாத்விக்” உணவு மூலம் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தி வருவதாகவும், தேங்காய் தண்ணீர் மட்டுமே குடித்து வருவதாகவும் தெரிவிக்கின்றன. இதனிடையே, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். அந்தவகையில், கடந்த வாரம், மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…
சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…