பாராலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

Published by
Edison

பாராலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடி வருகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு, ஜப்பானின் டோக்கியோவில் கோடைகால பாராலிம்பிக்கில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரும் 25-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டமபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

9 விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் இதுவரை இல்லாத அளவிற்கு 54 பேர் இதில் பங்கேற்கின்றனர்.

இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லுபவர்களுக்கு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் பரிசளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது போல, வரவிருக்கும் பாரா ஒலிம்பிக்கிலும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில்,54 பேர் கொண்ட பாராலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.அந்த வகையில், பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் தடகள வீரர் மாரியப்பனுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.மேலும்,சேலத்தில் இருந்து மாரியப்பன் அவரது குடும்பத்தினரும் காணொலியில் பங்கேற்றனர்.கடந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன்,இந்த முறையும் போட்டியில் பங்கேற்கிறார்.

இதனையடுத்து,நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நன்றி கூறினார்.மேலும், “உங்கள் ஊக்கம் இளைஞர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி அதில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும்” என்று பிரதமரிடம் அவர் கூறினார்.

Published by
Edison

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

10 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago