Categories: இந்தியா

ஜி20 மாநாட்டின் வெற்றி உங்கள் அனைவரையும் சேரும்.! அரசு அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி பாராட்டு மழை.!

Published by
மணிகண்டன்

கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பன்னாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனீசியா, இத்தாலி உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பெரும்பாலான தலைவர்கள் இந்தியா வந்திருந்தனர்.

தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஜி20  உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாடானது டெல்லியில் புதியதாக கட்டப்பட்டு இருந்த பாரத் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதை அடுத்து டெல்லி பாரத் மண்டபத்தில் வைத்து ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

பிரதமர் மோடி பேசுகையில், ஜி20 மாநாட்டின் வெற்றிக்கான பாராட்டுக்கள் உங்கள் அனைவரையும் சேரும். உங்கள் அனுபவங்களை ஆவணப்படுத்த நான் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். இது எதிர்கால நிகழ்வுகளுக்கு வழிகாட்டியாக அமையும்.

எல்லோரும் ஜி20 மாநாடு குறித்த அவரவர் அனுபவங்களை உங்கள் மொழியில் எழுதலாம். ஜி20 உச்சிமாநாடு நடத்த எதிர்கொண்ட சவால்களை எப்படி சமாளித்தீர்கள் என்பது பற்றி அதில் குறிப்பிடலாம். இந்த ஆவணங்கள் இணையதள சேமிப்பு பக்கத்தில் சேமிக்கப்படும் என கூறினார்.

இந்த பாராட்டு விழாவில், அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி,  துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், மற்ற பணியாளர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பாராட்டு விழா முடிந்த பிறகு அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago