ராஜஸ்தானில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள மக்கள் நல திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.!   

PM Modi

ராஜஸ்தான் நாத்துவாராவில் இன்று பிரதமர் மோடி ரூ.5,500 கோடி மதிப்புள்ள மக்கள் நல திட்டங்களை துவங்கி வைத்தார்.  

இன்று ராஜஸ்தான் வந்த பிரதமர் மோடி, நாததுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டார் அதன் பிறகு, காரில் நலத்திட்டங்கும் விழாவுக்கு காரில் பிரதமர் மோடி சென்றார்.

இதனை தொடர்ந்து, நாத்துவராவில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.5,500 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ரூ.5,500 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிடப்படவுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், பிரதமர் மோடியை வரவேற்கிறேன். தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே திட்டங்களை பிரதமர் இன்று அர்ப்பணித்துள்ளார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராஜஸ்தானில் நல்ல பணிகள் நடந்துள்ளன, ராஜஸ்தானில் சாலைகள் நன்றாக உள்ளன. முன்பெல்லாம் நாங்கள் குஜராத்துடன் போட்டியிட்டோம் & பின்தங்கியிருப்பதாக உணர்ந்தோம் ஆனால் இப்போது முன்னேறிவிட்டோம். என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்