பிரதமர் மோடியின் ட்விட்டர் ஹேக்; பிட்காயின் குறித்து ட்விட்..!

Published by
murugan

நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவி ட்விட் செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். இன்று அதிகாலை 2.11 மணிக்கு மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்து ட்விட் செய்துள்ளனர். அந்த ட்வீட்டில், ‘பிட்காயினுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. அரசு அதிகாரப்பூர்வமாக 500 BTC ஐ வாங்கி நாட்டின் அனைத்து மக்களுக்கும் விநியோகித்து வருகிறது. என்று பதிவிட்டு லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

இதனால் பலர் குழப்பம் அடைந்தனர். பின்னர் தான் தெரியவந்தது பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று, இதைத்தொடர்ந்து, இரண்டு நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. அடுத்த சிறிது நேரத்தில் மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமரின் அலுவலக ​அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. ட்விட்டர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் பதிவிட்ட பதிவுகளை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

10 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

13 hours ago