குஜராத்தில் ‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு..!

Published by
Edison

குஜராத்தில் ‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.

அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ,டாமன் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது.இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.

அவ்வாறு,புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனையடுத்து,குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் ‘டவ்-தே’புயலால் நிலச்சரிவு ஏற்பட்டது.மேலும்,பலத்த காற்று வீசியதால் 16,500 வீடுகள் சேதமடைந்தன.மேலும், 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதனைத் தொடர்ந்து,குஜராத்தில் 5,951 கிராமங்களில் இருந்து மின் தடை ஏற்பட்டது.

மேலும்,’டவ்-தே’ புயலால் இதுவரை மகாராஷ்டிராவில் 12 பேர்,தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் 5 பேர் என இதுவரை மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும், கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,’டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து வான்வழி ஆய்வு நடத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்திற்கு புறப்பட்டுள்ளார்.

அதன்படி,பிரதமர் மோடி இன்று காலை 9:30 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு பாவ்நகரில் தரையிறங்கவுள்ளார்.அங்கிருந்து உனா,டியு, ஜஃபராபாத் மற்றும் மஹுவா ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வு செய்யவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆய்வு மேற்கொண்ட பிறகு,பிரதமர் மோடி அகமதாபாத்தில் மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Edison

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

35 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago