உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நேற்று மாலை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனவும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களிடையே காணொளி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது, ‘ இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனவும், இந்த 21 நாட்கள் வீட்டிலிருந்து கொண்டு கொரோனா வைரஸை இந்தியாவில் இருந்து விரட்டுவோம். ‘ எனவும் குறிப்பிட்டார்.
மேலும், ‘ காபூலில் குருத்வாராவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வருத்தப்படுவதாகவும், இறந்த அனைவரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் குடிமக்களுடன் காணொளி மூலம் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…