தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டணம் நிர்ணயம் – டெல்லி அரசு உத்தரவு!

Published by
Rebekal

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் டெல்லி தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கும் நிலையில், இந்த ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டணத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். இந்நிலையில், தனியார் சேவைகள் பல மக்களுக்கு ஒரு புறம் உதவுகிறது, ஆனால், மறுபுறம் சுரண்டுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகபட்சமாக கட்டணம் வசூலித்து வரும் நிலையில், இனி எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகபட்சமாக 1,500 ரூபாயும், அடுத்த 10 கிலோ மட்டருக்கு பிறகு 1 கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வரையும் வசூலிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பி.எல்.எஸ் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாயும், அடுத்த பத்து கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வீதமும் வசூலிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏ.எல்.எஸ் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 4 ஆயிரம் ரூபாயும், அடுத்த பத்து கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வசூலிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், எந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை மீறுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது ஓட்டுனர உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆம்புலன்சின் பதிவு சான்றிதழ் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

1 hour ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

1 hour ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

2 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

4 hours ago