இந்தியாவில் தனியார் ரயில் சேவை வருகின்ற 2023-ஆம் மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணி அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து விடும் என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரயில்வே துறை தனியார் வசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே துறை தனியார் வசம் சென்றால் வேலை வாய்ப்பு இழக்கப்படும் , ரயில் கட்டணம் உயரும் என பல கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.
ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் இது குறித்து கூறுகையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் யாருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய தொழில்நுடப்ங்கள் அமல்படுத்தப்படும். இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறினார். ரயில்வே துறையில் சில வழித்தடங்களில் மட்டுமே தற்போது தனியார் மயமாக்கப்பட்டுள்ளது என கூறினார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…