பரபரக்கும் கர்நாடக தேர்தல்…பிரச்சாரத்தில் களமிறங்கும் பிரியங்கா காந்தி.!!

Published by
பால முருகன்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏப்ரல் 25-26 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், வரும் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து. தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளதால் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில், தேர்தலுக்கு முன்னதாக வெற்றி பெறும் அதன் அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி எடுத்துவருகிறது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 25-26 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இரண்டு நாட்களில் அவர் கர்நாடகாவிற்கு செல்லவுள்ளார்.

25-ஆம் தேதி பிரயங்கா காந்தி  கர்நாடகாவில் உள்ள தி.நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில்  மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில்  பேசுகிறார். அதன்பிறகு, 3 மணி முதல்  சாமராஜநகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கௌரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

மேலும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29ஆம் தேதி பிரதமர் மோடி கர்நாடகவிற்கு வருகை தரும் நிலையில், அவருடைய தலைமையில்  மெகா தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக தயாராகிறது என்பது குறிப்பிடதக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

1 hour ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

1 hour ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago