போலீஸ் தடியடியில் இருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தியின் வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த ராகுல்காந்தியை போலீசார் வழிமறைத்தனர்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உயிரிழந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அவர்களை டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக கூறினார்கள். இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர்.
இதற்கு முன், நொய்டா சாலைக்கு வந்த அவர்களை போலீசார் வழிமறைத்தனர். மேலும் அங்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனை கவனித்த பிரியங்கா காந்தி, பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தொண்டர்களை போலீஸ் தடியடியில் இருந்து காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ பதிவு, சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பரவிவருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…