உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் ஆத்திரம்.. எம்.எல்.ஏ. மீது காலணியை வீசி ஆவேசம்!

Published by
Surya

தெலுங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. மீது அப்பகுதி மக்கள் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள எம்.எல்.ஏ. மன்சிரெட்டி, அப்பகுதிக்கு சென்றார்.

அப்போது மடிப்பள்ளி என்ற இடத்தில் அவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு, வெள்ள நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், எம்.எல்.ஏ. மன்சிரெட்டி மீது காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும், அவரின் வாகனத்தையும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதனை கண்டுகொள்ளாத பொதுமக்கள், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதுத்தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

7 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago