Categories: இந்தியா

தண்டனை நிறுத்தி வைப்பு மட்டுமே! விடுதலை அல்ல – மத்திய அமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. சூரத் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், ராகுல் காந்திக்கு மீண்டும் வயநாடு மக்களவை எம்பி பதவியும் வழங்கி மக்களவை செயலகம் அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து 134 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற மக்களவையில் பங்கேற்றுள்ளார். ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவர் விடுதலை செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டதாக கொண்டாடுவது துரதிர்ஷ்டமானது, ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும் என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

2 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

2 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

3 hours ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

4 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

4 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

5 hours ago