செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலயில்,பஞ்சாப் அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செப்டம்பர் 15 க்குள் எடுக்கத் தவறினால்,அதன் பிறகு கட்டாயமாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
முன்னதாக,முதல்வர் கேப்டன் அமரீந்தர் வாராந்திர ஆர்டி-பிசிஆர் எதிர்மறை சோதனை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு உட்பட்டு, நான்கு வாரங்களுக்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணிகள் தொடர அனுமதித்தார். இருப்பினும், நோய்த்தொற்று உள்ள அனைவரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்
இதனைத் தொடர்ந்து,தகுதிவாய்ந்த மக்கள்தொகையில் மாநிலத்தில் ஏற்கனவே 57 % க்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டிருப்பதை குறிப்பிட்டு, முதல் டோஸ் 1.18 கோடி மற்றும் இரண்டாவது 37.81 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டது என்றும்,மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இருப்பு வீணாகாமல் பயன்படுத்தப்பட்டதற்கும் முதல்வர் திருப்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…