உத்தரகாண்டின் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி தேர்வு.
கடந்த 2017-ல் உத்தரகாண்ட் மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். இவர் கடந்த மார்ச் மாதம் மேலிடத்தின் உத்தரவை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் தீரத் சிங் ராவத் அவர்கள் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்ற போது, நாடாளுமன்ற எம்பியாக மட்டும் இருந்த காரணத்தால் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் உத்தரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலை அவருக்கு இருந்தது.
அப்படி தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே பதவியை தொடர முடியும் என்ற நிலை இருந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் இடைத் தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான காரியம் என்பதால், தானே முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். இவர் முதல்வர் பதவியை ஏற்று 4 மாதத்திலேயே, பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டேராடூனில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கதிமா தொகுதி எம்.எல்.ஏ-வான புஷ்கர் சிங் தாமி (45) முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…