Categories: இந்தியா

Quarterly Exam: புதுச்சேரியில் 21 முதல் காலாண்டு தேர்வு.. செப்.30 முதல் அக்.4 வரை விடுமுறை!

Published by
பாலா கலியமூர்த்தி

புதுச்சேரியில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் காலாண்டு தேர்வு நடைபெறுகிறது.

மேலும், புதுச்சேரியில் செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்.4ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, அக்.5ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக்தில் காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். இதுபோன்று, 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…

2 hours ago

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

2 hours ago

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…

2 hours ago

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

4 hours ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

4 hours ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

4 hours ago