7 நாட்களில் வெளியேறுங்கள்.! அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு குடிசைவாசிகளுக்கு நோட்டிஸ்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகையையொட்டி அகமதாபாத்தில் மோடேரா பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக வருகிறார். அப்போது வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணிக்கிறார். பின்னர் அங்கு அவருக்கு, “நமஸ்தே டிரம்ப்” என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். இதனிடையே டிரம்ப் வருகையையொட்டி சர்தார் வல்லாபாய் ஸ்டேடியம் அருகே உள்ள மோடேரா (Motera) பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இந்நிலையில், 22 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் அவர்களை அங்கிருந்து விரைவில் வெளியேற சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதால், வெளியூருக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளின் தரப்பில் கூறுைகயில், இந்த குடிசைவாசிகள் நகர திட்டமிடல் திட்டங்களில் ஒன்றின் கீழ் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நோட்டீஸ் அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்றனர். இதற்கு முன் டிரம்ப் வருகையொட்டி அப்பகுதியில் குடிசைகளை மறைத்து சுவர்கள் எழுப்பப்பட்டு அழகுபடுத்தப்பட்டது என குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

10 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

13 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

1 hour ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

5 hours ago