7 நாட்களில் வெளியேறுங்கள்.! அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு குடிசைவாசிகளுக்கு நோட்டிஸ்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகையையொட்டி அகமதாபாத்தில் மோடேரா பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக வருகிறார். அப்போது வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணிக்கிறார். பின்னர் அங்கு அவருக்கு, “நமஸ்தே டிரம்ப்” என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். இதனிடையே டிரம்ப் வருகையையொட்டி சர்தார் வல்லாபாய் ஸ்டேடியம் அருகே உள்ள மோடேரா (Motera) பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இந்நிலையில், 22 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் அவர்களை அங்கிருந்து விரைவில் வெளியேற சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதால், வெளியூருக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளின் தரப்பில் கூறுைகயில், இந்த குடிசைவாசிகள் நகர திட்டமிடல் திட்டங்களில் ஒன்றின் கீழ் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நோட்டீஸ் அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்றனர். இதற்கு முன் டிரம்ப் வருகையொட்டி அப்பகுதியில் குடிசைகளை மறைத்து சுவர்கள் எழுப்பப்பட்டு அழகுபடுத்தப்பட்டது என குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago