ராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விக்ரம் ஜோஷி என்பவர் உத்திரபிரதேச மாநிலம் காசியாப்பத்தில் உள்ள விஜய் நகரை சேர்ந்தவர்.இவர் அங்குள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மர்மநபர்கள் சிலர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்குஇடையில் பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தனது மருமகளுக்கு நடந்த துன்புறுத்தலை தட்டி கேட்டதற்கு இது நடந்துள்ளது.அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சிக்கு வந்த பின்னர் ராம ராஜ்ஜியம் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்திரபிரதேச அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…