ராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விக்ரம் ஜோஷி என்பவர் உத்திரபிரதேச மாநிலம் காசியாப்பத்தில் உள்ள விஜய் நகரை சேர்ந்தவர்.இவர் அங்குள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மர்மநபர்கள் சிலர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்குஇடையில் பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தனது மருமகளுக்கு நடந்த துன்புறுத்தலை தட்டி கேட்டதற்கு இது நடந்துள்ளது.அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சிக்கு வந்த பின்னர் ராம ராஜ்ஜியம் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்திரபிரதேச அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…