[Image source : ANI]
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அப்போது, வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவி பறிப்பால் தொகுதிக்கான பிரதிநிதிகளின் குரல் மறுக்கப்படுகிறது. மக்களவை தொகுதி பிரதிநிதியின் குரல் மறுக்கப்படுவது ஈடுசெய்ய முடியாத இழப்பு. 3 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கலாம். இதனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தியின் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு பின், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…