கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வயநாட்டில் காந்தி சிலையை திறந்து வைத்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இப்பகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ராகுல் காந்தி கேரளா வந்துள்ளார். கோழிக்கோடு விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து ராகுல்காந்தி வயநாட்டில் மானந்தவாடி காந்தி பூங்காவில் சிற்பி கே.கே.ஆர்.வெங்கராவால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையை திறந்து வைத்துள்ளார்.
அதன் பின் பேசிய அவர், மகாத்மா காந்தி பற்றிய சக்தி வாய்ந்த விஷயம் என்னவென்றால் அவர் எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என அவர் சொன்னதுடன் மட்டுமல்லாமல், அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார். மேலும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக் கூறிய அவர் பெண்களை மரியாதையுடன் நடத்தினார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…