திடீரென கடலுக்குள் குதித்த ராகுல் காந்தி…! ஒரேயொரு மீன் தான் கிடைத்தது…!

Published by
லீனா

கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றுள்ளார்.

கேரளாவின் வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி ஆகும். இங்கு அவர் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா சென்றுள்ளார். எங்கு சென்றாலும் மக்களோடு மக்களாய் இயல்பான முறையில் பழகும் இவரது குணம் மக்களை கவர்ந்து இழுக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது மீனவர்கள் படகில் பயணம் செய்த போது கடலில் வைத்து சமைத்துக் கொடுத்த மீனையும் அவர் ருசித்து சாப்பிட்டுள்ளார். பின் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராகுல் காந்தி திடீரென தனது சட்டையை கழட்டிவிட்டு கடலில் குதித்துள்ளார். இதனால் உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சற்று பதற்றம் அடைந்தனர். ஆனால் கடலில் குதித்த ராகுல்காந்தி சில நிமிடங்கள் கடலில் நீந்தி, பின் படகில் ஏறினார்.

இதுகுறித்து படகின் உரிமையாளர் கூறுகையில், ராகுல்காந்தி கடலில் எங்களுடன் சுமார் 3 மணி நேரம் செலவழித்தார். இதற்காக இன்று காலை 4:00 மணிக்கு அவர் கடற்கரையில் தயாராக இருந்தார். நாங்கள் சமைத்து கொடுத்த மீனையும் ருசித்து சாப்பிட்டார்.  எங்களுடன் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் சகஜமான முறையில் பழகினார் என் அதெரிவித்தார்.

ராகுல் காந்தி கடலுக்கு சென்ற அனுபவம் குறித்து கூறுகையில், ‘மீனவர்கள் வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டேன். அதனால், இன்று காலை எனது சகோதரர்களுடன் கடலுக்கு சென்றேன். கடலுக்கு சென்ற படகில்  மீண்டும் கரைக்கு திரும்பும் வரை ஒட்டுமொத்தமான கஷ்டமான நிலையை அடைகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கடலில் சென்று வலைவிரித்து மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். சிலர் பயனடைகிறார்கள். நாங்கள் மீன்பிடிக்க விரும்பினாம். அனால், ஒரேயொரு மீன் தான் கிடைத்தது. முதலீடு செய்தும், வலை  காலியாகவே இருந்தது. இது தான் என்னுடைய அனுபவம் என தெரிவித்தார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

21 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago