முக்கியச் செய்திகள்

உடனடியாக ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்..பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காட்டம்.!!

Published by
பால முருகன்

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர்.

விபத்து எப்படி நடந்தது அதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்  என காட்டத்துடன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது ” ஒடிசாவில் வேகமாக சென்று கொண்டு விபத்துக்குளாளன அந்த ரயில், அந்த தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ரயிலே இல்லை. அது மெதுவாக செல்லக்கூடிய ரயில்களுக்கான தண்டவாளம் எனும் இப்போது நமக்கு தெரிகிறது. எனவே பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் உடனடியாக ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.

திறமையற்ற, அல்லது பொருத்தமற்ற  அமைச்சர்களாக நியமிப்பதில் பிரதமர் மோடி உலகப் புகழ்பெற்றவர். மற்றொரு உதாரணம் என்னவென்றால் மணிப்பூர் கலவரம் தான்” என மிகவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

38 seconds ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

38 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

5 hours ago