ரயில்வே நிர்வாகம் தற்போதைய நடப்பு காலாண்டில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் ரயில் மூலமாக 13,398.92 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாம் காலாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பயணிகள் மூலம் 13,243.82 கோடிகள் வருமானம் ஈட்டி உள்ளன.
பயணிகள் கட்டணம் 155 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்கு ரயில் கட்டணம் 3900 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருமான விவரங்கள் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது ரயில்வே வருவாய் குறைந்து காணப்படுவதால் பயணிகள் டிக்கெட் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் மீண்டும் மறுசீரமைக்க உள்ளோம். இதுகுறித்து தற்போது விரிவாக கூற இயலாது. சரக்கு ரயில் கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. அதனால் ஆலோசனைக்கு பின்னரே இறுதி முடிவு எட்டப்படும். என தெரிவித்தார்.
மேலும், ‘ரயில்வே ஊழியர்கள் இதுவரை ரயில்வே நிர்வாகமே தேர்வு செய்து வந்தது. ஆனால், இது இனிமேல் யு.பி.எஸ்.சி தேர்வு மூலம் ரயில்வே ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.’ எனவும் கூறினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…