ரயில்வே நிர்வாகம் தற்போதைய நடப்பு காலாண்டில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் ரயில் மூலமாக 13,398.92 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாம் காலாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பயணிகள் மூலம் 13,243.82 கோடிகள் வருமானம் ஈட்டி உள்ளன.
பயணிகள் கட்டணம் 155 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்கு ரயில் கட்டணம் 3900 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருமான விவரங்கள் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது ரயில்வே வருவாய் குறைந்து காணப்படுவதால் பயணிகள் டிக்கெட் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் மீண்டும் மறுசீரமைக்க உள்ளோம். இதுகுறித்து தற்போது விரிவாக கூற இயலாது. சரக்கு ரயில் கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. அதனால் ஆலோசனைக்கு பின்னரே இறுதி முடிவு எட்டப்படும். என தெரிவித்தார்.
மேலும், ‘ரயில்வே ஊழியர்கள் இதுவரை ரயில்வே நிர்வாகமே தேர்வு செய்து வந்தது. ஆனால், இது இனிமேல் யு.பி.எஸ்.சி தேர்வு மூலம் ரயில்வே ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.’ எனவும் கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…