மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
பல இடங்களில் போராட்டங்கள் கலவரமாக மாறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் நேற்று அசாமில் அமைதியான முறையில் சில இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இதேபோன்று இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாஜக , ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இன்று பேரணியாக சென்றன.
பேரணியாக சென்றவர்கள் தங்கள் கைகளில் மூவர்ண கொடி மற்றும் தங்களுடைய அமைப்புகளின் கொடிகளை ஏந்தியும் , ஆதரவு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டும் , கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…