கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். அதே சமபயத்தில் ஆதரவற்றவர்கள் பலர் உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு அரசும், பல தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகிறார்கள். இதில் பலர் சத்தமில்லாமல் உதவி செய்தாலும், உதவி செய்வதை மற்றவர்கள் பார்த்தால் பார்ப்பவர்களும் உதவி செய்யும் எண்ணம் தோன்றலாம் என்ற நோக்கத்தோடு சிலர் புகைப்படம் எடுப்பார்கள்.
ஆனால் தற்போது பலர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விளம்பரம் செய்து கொள்வதற்காகவே உதவி செய்வதை புகைப்படம் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது சேவையாக இருக்க வேண்டுமே தவிர விளம்பரமாக இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆதரவற்றவர்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதை மாவட்ட ஆட்சியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதே சமயத்தில் சரியான சமூக இடைவெளியுடன் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…