மாநிலங்களவை தலைவர் விவகாரம்.! ராகுல்காந்தி விளக்கம்.!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரை அவமதித்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது ஆளும்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்பிக்கள் ஒற்றுமையைக் காட்ட நாடாளுமன்றத்தில் பத்து நிமிடங்கள் நின்ற நிலையில் இருந்தனர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகிய முக்கிய அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டு ஜகதீப் தன்கருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிடுகையில், எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தனர், அவர்களின் வீடியோவை நான் படம்பிடித்தேன். எனது வீடியோ எனது தொலைபேசியில் உள்ளது. ஊடகங்கள் அதை காட்டுகின்றன.

யாரும் எதுவும் கூறவில்லை. சுமார் 150 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியியேற்றப்பட்டனர். ஆனால், அதுபற்றி நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை . அதானி பற்றிய விவாதமும் நாடாளுமன்றத்தில் இல்லை, ரஃபேல் பற்றிய விவாதமும் இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் விவாதம் இல்லை. எங்கள் எம்பிக்கள் மனமுடைந்து வெளியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வீடியோ பற்றி விவாதிக்கிறீர்கள் என ராகுல்காந்தி செய்தியாளர்கள் பேசினார்.

Recent Posts

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

28 minutes ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

47 minutes ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

1 hour ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

2 hours ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago