ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஏழைகளுக்கு உதவியாக இருக்கும் – பிரதமர் மோடி ட்வீட்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து, கடன் வழங்குவதை அதிகரிக்கும் பிரதமர் மோடி ட்வீட்.

கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் கடும் சரிவை கண்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து சில சலுகைகளை அறிவித்தார். அப்போது, ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதம் 4 லிருந்து 3.75 ஆக குறைத்து, மக்களிடம்ப பணம் புழக்கத்துக்காக வட்டி விகிதம் 0.25 % ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அவசர தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதையடுத்து சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து, கடன் வழங்குவதை அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகள் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும். இது (WMA) வரம்புகளை அதிகரிப்பதன் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் உதவும் என்றும் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

4 minutes ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

9 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

10 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

11 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

11 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

12 hours ago