Nambi Narayan Chand-3 [Image-manoramanews]
சந்திராயன்-3 விண்கலத்திற்கு உண்மையான பிரச்சனை, தரையிறங்குவதில் தான் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி தகவல்.
சந்திராயன்-3 விண்கலத்தை நிலவிற்கு ஆய்வு செய்ய, இந்தியா இன்று இன்னும் சற்று நேரத்தில் அதாவது 2.35 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன்மூலம் நிலவிற்கு மூன்றாவது முறையாக இந்தியா விண்கலத்தை அனுப்புகிறது.
இந்தியாவின் இந்த வரலாற்று புகழ்மிக்க நிகழ்வுக்கு முன்பாக, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், தனியார் செய்திக்கு(டைம்ஸ் நவ்) அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சந்திராயன்-3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படஉள்ளநிலையில், இது ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என நினைக்கிறேன், அப்போது தான் உண்மையான பிரச்சனை தொடங்கும்.
அதாவது நிலவில் விண்கலம் தரையிறங்கும் போது சாஃப்ட் லேண்டிங் என்பது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதாவது விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதில் தான் சந்திராயன்-3க்கு உண்மையான பிரச்சனையாக இருக்கும், கடந்த முறை தரையிறங்குவதில் தான் நாம் தோல்வியடைந்தோம், ஆனால் இம்முறை தரையிறங்குவதில் சந்திராயன்-3இல் அதுபோன்று பிரச்சனை ஏதும் நிகழ வாய்ப்பில்லை என அவர் கூறியிருக்கிறார்.
சாஃப்ட் லேண்டிங்(தரையிறங்குவதில்) விண்கலம் தரையிறங்குவதில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு சந்திராயன்-3 வடிவமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன் மேலும் தெரிவித்தார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…