மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகை குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த பலர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் ) உரையாற்றினார்.
பொதுமக்கள் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பெரிதும் எதிர்பார்ப்பது தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா..? என்பதுதான் காரணம் கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக இருந்து வருகிறது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தவரும் நிலையில், இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வரி சலுகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வருமான வரி சலுகைகள், ஜி.எஸ்.டி. சலுகைகள் இல்லாமல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என பல அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த சம்பளம் பெறும் வகுப்பினர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். இதுகுறித்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…