கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் – மத்திய அரசு எச்சரிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில்லை என மத்திய அரசு வேதனை.

மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில்லை என்றும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லவ் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்பதற்காக அலட்சியம் காட்ட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என இணைச்செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் 24 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதே இல்லை, 45% பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை என்றும் 63% பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை எனவும் குற்றசாட்டியுள்ளார். நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் 80 சதவீதம் 90 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கண்டறியப்படுகிறது.

மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு விகிதம் பதிவாகி வருகிறது என்றும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா பரவல் மத்தியில் கொடைக்கானலில் நேற்று திறக்கப்பட்ட 3 மூன்று பூங்காக்களை தற்காலிகமாக மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

39 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago