ManipurReliefFund [Image - PTI]
மணிப்பூர் மாநில கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக மத்திய அரசு ரூ.101.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் கலவரம் கட்டுக்குள் இருப்பதாகவும் அமைதி திரும்பியதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய அரசு ரூ.101.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமித்ஷா சமீபத்தில் நிலவரம் குறித்து அறிய மணிப்பூருக்கு பயணம் செய்திருந்தார், அப்போது நிவாரணம் அறிவிப்பது குறித்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மணிப்பூர் கலவரத்திற்கு பிறகு அங்கு இதுவரை மொத்தம் 896 ஆயுதங்கள், 11,763 தோட்டாக்கள் மற்றும் பல்வேறு வகையான 200 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை ஆலோசகர் தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…