மும்பை முலுண்டில் உள்ள அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.1 கோடியை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முலுண்ட் காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், குற்றவாளிகள் இருவர் உரிமையாளரையும், ஊழியர்களையும் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அலுவலகத்தில் இருந்த பணத்தை பறிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனமும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முலுண்ட் காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த அலுவலகம் அமைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அலுவலக உரிமையாளரும், அவரது இரண்டு ஊழியர்களும் அங்கு இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…