குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் 3-வது சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு நடைபெற்றது. நாட்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அந்தத் துறையில் உள்ள சவால்கள், அவற்றுக்கான தீா்வுகள் ஆகியவை குறித்து பேசுவதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னா் கடந்த 1998 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய உருளைக்கிழங்கு சங்கம், டெல்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் மற்றும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இணைந்து உரையாற்றிய பிரதமர் மோடி, சில குறிப்பிட்ட உணவு தானியங்கள், உணவுப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் மூன்று நாடுகளுள் நம் இந்திய நாடும் இருக்கின்றது. இந்த சாதனை நமது விவசாயிகளின் அயராத உழைப்பாலும், அரசின் சிறப்பான திட்டங்களாலுமே சாதித்தியமாகியுள்ளது. மேலும் வரும் 2022-ம் ஆண்டுக்குள் நம் நாட்டு விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றோம். பின்னர் விவசாயிகளுடன் அரசும் இணைத்திருப்பதாலே பல சாதனைகளை நிகழ்த்த முடிகிறது. சுமார் 6 கோடி விவசாயிகளுக்கு இதுவரையில் ரூ.12 ஆயிரம் கோடி பணம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக போடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…