Categories: இந்தியா

விஷவாயு கசிந்த விவகாரம்..! இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு..! பஞ்சாப் சுகாதார அமைச்சர்

Published by
செந்தில்குமார்

பஞ்சாப் லூதியானாவில் விஷவாயு கசிவில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். முன்னதாக, வாயுவின் தன்மை பற்றி இன்னும் அறியப்படாததால்  அப்பகுதியில் உள்ள மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தும்படி லூதியானாவின் மேற்கு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஸ்வாதி திவானா கூறினார்.

அந்தவகையில், போலீசார் அப்பகுதியை சீல் வைத்து மக்கள் யாரும் அப்பகுதிக்குள் வராமல் பாதுகாத்துவருகின்றனர்.மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் வாயுக்கசிவு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதோடு, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தற்பொழுது பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் கூறுகையில், விஷவாயுக் கசிவினால் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை இழப்பீடும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். என்று அறிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

26 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

54 minutes ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

1 hour ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

2 hours ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 hours ago