ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ .2,000 உதவி தொகை – குஜராத் அரசு அறிவிப்பு ..!

Published by
murugan

கொரோனாவால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ .2,000 உதவி கிடைக்கும் என்று குஜராத் அரசு அறிவித்தது.

கொரோனா வைரஸ் நோயால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முகியா மந்திரி பால் சேவா யோஜனாவின் தற்போதைய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 2,000 உதவி தொகை என குஜராத் அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த நோயால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டது.

மேலும் அவர்கள் 21 வயதாகும் வரை மாதந்தோறும் ரூ .4,000 உதவிதொகையும், 21 வயதிற்கு மேல் அவர்கள் உயர் படிப்புக்கு செல்ல விரும்பினால், அவர்கள் 24 வயதாகும் வரை மாதத்திற்கு ரூ.6,000 உதவி தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பெற்றோர்களையும் கொரோனா தொற்றுநோயால் இழந்த 776 குழந்தைகள், இந்த மாத தொடக்கத்தில் பால் சேவ யோஜனாவின் கீழ் தலா ரூ .4,000 முதல் மாத தவணை பெற்றனர்.

கொரோனா வைரஸ் நோயால் குஜராத்தில் இதுவரை 825,000 மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,076 உயிரிழந்துள்ளனர். 814,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதாரத் துறையின் படி, கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களாக  குஜராத் மாநிலத்தில் எந்த மரணமும் ஏற்படவில்லை.

Published by
murugan

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

14 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

16 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

16 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

17 hours ago