மார்க்கெட்டுக்குள் வர ரூ.5, ஒரு மணிநேரத்தில் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம்!

Published by
Surya

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள சந்தைகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தும், ஒருமணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் மகாராஷ்டிராமாநிலத்தில் உள்ள மும்பை, புணே ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாசிக் நகரிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் அங்கும், இங்கும் சென்று வருவதால் அங்கு கொரோனா பரவலுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நாசிக்கில் உள்ள சந்தைகளுக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5-ஐ கட்டணமாக நிர்ணயித்து நாசிக் நகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு மணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் உத்தரவித்துள்ளது. இதன் மூலம் மார்க்கெட்டில் கூட்டங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

14 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

4 hours ago