இந்திய ஜனநாயக அமைப்புகளை கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி.! ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் சென்ட்ரிர்ந்தார். லடாக் பயணத்தின் போது அவர் பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களவை, மாநிலங்களவை, திட்டக் கமிஷன் மற்றும் பாதுகாப்பு படைகள் உட்பட பல அமைப்புகளை இந்தியா உருவாக்கியது. அதில் தற்போது ஆர்எஸ்எஸ் தனது அமைப்பை சேர்ந்தவர்களை உட்புகுத்த முயற்சி செய்கிறது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், அரசு அமைப்புகளில் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களின் பணிகளை கூட ஆர்எஸ்எஸ் தான் தற்போது தீர்மானிக்கிறது என்றும், தன்னிடம் சில அதிகாரிகள் தாங்கள் ஆர்எஸ்எஸ்-ன் வழிகாட்டுதலை பெற்று தான் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இந்த இரண்டு நாள் லடாக் பயணத்தின் போது, லடாக் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அரசியல் கள நிலவரம் குறித்தும், கட்சி உள் விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

முன்னதாக பாரத் ஒற்றுமை யாத்திரையின் போது, காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி அப்போது லடாக் யூனியன் பிரதேசத்துக்குச் செல்லவில்லை. எனவே, அவர் லடாக்கிற்கு நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாள் பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

5 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

7 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

8 hours ago