மாதவிடாய் சுழற்சி நேரத்தில் முன்னும் பின்னும் ஐந்து நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பி வருவதாகவும் இது தவறானது, அது உண்மை அல்ல எனவும் அரசாங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினமும் குறைந்தது மூன்று லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு நாடு முழுவதிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. வருகிற மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி குறித்து பல வதந்திகள் பரவி வரும் நிலையில், அரசாங்கம் இதற்கு பதில் அளித்து வருகிறது. மாதவிடாய் சுழற்சி நேரத்தில் முன்னும் பின்னும் பெண்கள் ஐந்து நாட்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது அது ஆபத்து என சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதாகவும், இது உண்மையல்ல. வதந்திகளுக்கு ஆளாகாதீர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1 ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போட வேண்டும் என அரசாங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…