ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்து உள்ளது. சமீபத்தில், அம்மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2 காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களிலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை, இதனால், சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இந்த தகுதி நீக்க நோட்டீஸ்க்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. தற்போது உள்ள நிலைமையை தொடரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இன்று ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக இரண்டு மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு எதிராக போர் கோடி தூக்கி சென்ற சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்ப்பூரிலிருந்து வெளியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.
இந்த சந்திப்பில் ராகுல் காந்தியுடனும், மூத்த தலைவர்கள் அகமது படேல் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் சச்சின் பைலட் பேசியதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை, அவர்கள் சந்தித்ததிலிருந்து, ஒரு நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டம் குறித்து சச்சின் பைலட்டோ, ராகுல் காந்தியின் அலுவலகமோ கருத்து தெரிவிக்கவில்லை. ஜெய்ப்பூரிலிருந்து வெளியேறிய பின்னர் காந்தி பைலட், ராகுல் காந்தியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். வருகின்ற 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூடவுள்ளது அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறலாம் என கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…