நெருங்கி வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு.! சச்சின் பைலட், ராகுல் காந்தி சந்திப்பு.?

Published by
murugan

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்து உள்ளது. சமீபத்தில், அம்மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2 காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களிலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை, இதனால், சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இந்த தகுதி நீக்க நோட்டீஸ்க்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. தற்போது உள்ள நிலைமையை தொடரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்,  இன்று  ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக இரண்டு மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு எதிராக போர் கோடி தூக்கி சென்ற சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்ப்பூரிலிருந்து வெளியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.

இந்த சந்திப்பில் ராகுல் காந்தியுடனும், மூத்த தலைவர்கள் அகமது படேல் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் சச்சின் பைலட் பேசியதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை, அவர்கள் சந்தித்ததிலிருந்து, ஒரு நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டம் குறித்து சச்சின் பைலட்டோ, ராகுல் காந்தியின் அலுவலகமோ கருத்து தெரிவிக்கவில்லை. ஜெய்ப்பூரிலிருந்து வெளியேறிய பின்னர் காந்தி பைலட், ராகுல் காந்தியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.  வருகின்ற 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூடவுள்ளது அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

9 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

9 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

10 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

10 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

11 hours ago