பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் அண்மையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ராஜினாமா செய்ததால், நேற்று காலை 11 மணிக்கு சண்டிகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், தற்பொழுது பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் பஞ்சாபின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 59 வயதுள்ள சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் பஞ்சாபின் கரார் நகராட்சி தலைவராக இரு முறை பதவி வகித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…