பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார்.
இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி இன்று பதிவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில்,பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு என்பது ஒரு தேர்தல் வித்தைப்போல் தெரிவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னியை நான் வாழ்த்துகிறேன். அவர் முன்னதாகவே முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால்,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு தேர்தல் வித்தை போல் தெரிகிறது.
அடுத்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தலித் அல்லாதவரின் தலைமையில் போட்டியிடப்படும் என்பதையும் ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதன் பொருள் காங்கிரஸ் இன்னும் தலித்துகளை முழுமையாக நம்பவில்லை. பஞ்சாபில் சிரோமணி அகாலி தால் (எஸ்ஏடி-பிஎஸ்பி) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் பயப்படுகிறது”,என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…