கடந்த சனிக்கிழமை பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.இவரை போல துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றார்.ஆனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.இதற்கு எதிராக 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இவருக்கு முன்னதாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து அஜித் பவார் விலகினார்.எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி சார்பாக உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதற்கு இடையில் அஜித் பவார் ஏற்கனவே தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாக தெரிவித்து வந்தார்.அஜித் பவார் குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார். அஜித் பவார் கட்சியின் பதவியில் தொடர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…