ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசி அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது.
அந்த வகையில் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.
ராகுலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், ராகுல் காந்தி காஷ்மீருக்கு வரவேண்டும் என்று நான் அழைப்புவிடுக்கிறேன்.ராகுல் காஷ்மீருக்கு வருவதற்காக நானே விமானம் அனுப்பி வைக்கிறேன் .இங்கு வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.அதில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நான் அடங்கிய குழுவினர்,ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்க்க வருகிறேன்.ஆனால் எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
காஷ்மீர் ஆளுநர் இதற்கு பதில் அளித்தார்.அவரது பதிலில் ,ராகுல் காந்தி காஷ்மீர் வருவதற்கு நிபந்தனை விதிப்பதால், அழைப்பை வாபஸ் பெறுகிறேன் என்று தெரிவித்தார்.இதனிடையே இந்த கருத்துக்கு ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறுகையில், எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன் , எப்போது வரட்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…