அழைப்பை வாபஸ் பெறுகிறேன்!ராகுல் காந்தி கருத்தால் பின்வாங்கிய காஷ்மீர் ஆளுநர்

Published by
Venu

ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசி அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது.

அந்த வகையில்  காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

ராகுலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், ராகுல் காந்தி காஷ்மீருக்கு வரவேண்டும் என்று நான் அழைப்புவிடுக்கிறேன்.ராகுல்  காஷ்மீருக்கு வருவதற்காக நானே  விமானம்  அனுப்பி வைக்கிறேன் .இங்கு வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும்  என்று தெரிவித்தார்.

இதற்கு ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.அதில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நான் அடங்கிய குழுவினர்,ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்க்க வருகிறேன்.ஆனால்  எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

காஷ்மீர் ஆளுநர் இதற்கு பதில் அளித்தார்.அவரது பதிலில் ,ராகுல் காந்தி  காஷ்மீர்  வருவதற்கு நிபந்தனை விதிப்பதால், அழைப்பை வாபஸ் பெறுகிறேன் என்று தெரிவித்தார்.இதனிடையே இந்த கருத்துக்கு  ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறுகையில், எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன் , எப்போது வரட்டும்? என்று  கேள்வி  எழுப்பியுள்ளார்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

7 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

9 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago