மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் – கேரள அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

Published by
Rebekal

விமான விபத்தை சிறப்பாக கையாண்ட கேரள அரசு, நிலச்சரிவில் சிக்கிய மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் என கவிஞர் வைரமுத்து அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்த இந்திய மக்கள் தாயகம் திரும்புவதற்கு முடியாத சூழ்நிலையில் இருந்தபோது, வந்தே பாரத் எனும் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கொண்டிருந்தனர். இதில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 185 இந்தியர்களுடன் கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்த போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் விமானம் இரண்டாகப் பிளந்து பேரிழப்பு ஏற்பட்டது.

இதில் 2 விமானிகள் உள்பட 197 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கி இறந்தவர்களை மீட்டு, விபத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் பெட்டி மூடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. அங்கு வாசித்த 85 க்கு மேற்பட்ட குடிசைகள் நிலச்சரிவில் புதையுண்டது. இதில் 26 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வேலை செய்து வந்தவர்கள் எத்தனை பேர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையவில்லை.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, விமான விபத்தை திறமையாக கையாண்டு முடித்துள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் அரசாட்சி பாராட்டுக்குரியது. அதேபோல தேயிலை தோட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து மீட்டு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கவிதை ஒன்று எழுதியுள்ளார். “வான் வழி வந்தோர் மேன் மக்கள் அல்லர், மன்வழி சென்றோர் கீழ் மக்கள் அல்லர் என்பது பொது உடமை, இது பூமிக்கு புரியாதா என்ன? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதோ அவரது பதிவு,

Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

10 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

11 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

12 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

12 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

14 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

15 hours ago