கொரோனா மத்தியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.351 கோடி மதிப்பில் பள்ளி சீருடை..!

Default Image

கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் மத்தியப் பிரதேச அரசு மாணவர்களுக்கு ரூ.351 கோடி மதிப்பிலான சீருடைகளை விநியோகித்ததாக அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோயின் போது மாணவர்கள் வீட்டில் படிப்பதாலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும் சீருடை விநியோகம் குறித்த தகவல்களை காங்கிரஸ் எம்எல்ஏ கேட்டிருந்தார். மேலும், சீருடை வினியோகப் பணிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பஞ்சிலால் மேதா கூறினார்.

இதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2020-21 நிதியாண்டில் 50 மாவட்டங்களில் உள்ள 1.17 கோடி மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை வழங்கப்பட்டுள்ளது.  சுயஉதவி குழுக்கள் இந்த சீருடைகளை தயாரித்துள்ளதாகவும், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளி நிர்வாகக் குழு மூலம் அவை விநியோகிக்கப்பட்டதாக கூறினார்.

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் தொடங்கப்பட்டது என்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் “நமது வீடு, நமது பள்ளி” திட்டத்தின் கீழ் ஆன்லைனில் படித்தனர் என்றும் கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 08052025
Central government orders OTT platforms
Pakistan issues security alert
S-400
Union minister Jaishankar
Union minister Rajnath singh say about Operation Sindoor