மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக 21 நாளுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 14ம் தேதி ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஏப்.30 வரை ஊரடங்கை நீடிக்க பிரதமரிடம், முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 5 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…