கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறப்பதற்கு பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு நாடுகளிலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஏற்கனவே ஜூலை 20-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது இந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக இன்று முதல் பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் எனவும், மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…